மந்தாரக்குப்பத்தில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் ஆங்காங்கே அதிகளவில் மண் குவிந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விபத்துகளில் சிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.