பெருநகர சென்னை மாநகராட்சி மணலி 2-வது மண்டலம், 19-வது வார்டு, மாத்தூர் 3-வது பிரதான சாலை மற்றும் 76-வது தெருவை இணைக்கும் வளைவில் மின்மாற்றி ஒன்று உள்ளது. மின்மாற்றியால் மின்விபத்து ஏற்படாமல் இருக்க அதனை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேலியால் தெருவின் முனையில் திரும்பும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.