புதுக்கோட்டை மாநகராட்சி, லாரி மார்க்கெட்டில் இருந்து அண்ணா சிலை வரை உள்ள சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதேபோல் திருவப்பூர் ரெயில்வே கேட்டிலிருந்து மீயூசியம் வரை உள்ள சாலையும் மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்துள்ளதால், பஸ்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலைகளில் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் வாகனங்களை விட்டு விபத்துக்குள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.