சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2025-12-07 14:27 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா காரையூர் அருகே மேலத்தானியத்திலிருந்து சூரப்பட்டி, கண்ணுக்குழி வழியாக ஊனையூர் செல்லும் தார்சாலை உள்ளது. இச்சாலையில் இரண்டு புறமும் மழையினால் மண் அரிப்பு ஏற்பட்டு சிதிலமடைந்துள்ளது. இந்த தார்சாலை குறுகலாக இருப்பதால் எதிர்வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்