சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து காட்டூர் ரோடு மற்றும் அம்மாபாளையம்பிரிவு நால்ரோடு வரை ஜல் ஜீவன் திட்டத்துக்காக குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக அறச்சலூர், அம்மாபாளையம், சென்னிமலை பஸ் நிலையம் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.