சேலம் தொளசம்பட்டி ஊராட்சி காந்திநகர் அருகே சொட்டையானூர் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை மண் சாலையாக உள்ளதால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலை குறுகிக்கொண்டே வருவதால் நடந்து செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே மண் சாலையை தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஊர்பொதுமக்கள், தொளசம்பட்டி.