ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக உள்ளது. இதனால் இச்சாலையில் பயணிக்கும் நடைபாதையினர் மற்றும் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.