விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து குல்லூர்சந்தை செல்லும் தார்ச்சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையால் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?