‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-10-26 12:57 GMT

கரூர் மாவட்டம், வெங்கமேடு செங்குந்தநகர் 3-வது தெருவில் கழிவுநீர் வாய்க்கால் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், பாலத்தின் மேல் திட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, கான்கிரீட் இரும்பு கம்பிகள் பெயர்ந்து உள்ளது என்றும், இதனால் இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த பள்ளத்தில் வாகனங்களை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர் என்றும் புகார் அளிக்கப்பட்டது. இந்த பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கிய நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்