கம்பம் அருகே சாமாண்டிபுரம் குள்ளப்பகவுண்டன்பட்டி வாய்க்கால் கரைப்பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.