சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2025-10-19 13:32 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அசோக் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. மேலும் இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே ஓடுவதினால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மாடுகள் இரவு நேரத்தில் சாலை ஓரங்களில் படுத்துக் கொள்வதால், சாலை ஓரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகள் சாலைகள் படுத்திருப்பது தெரியாமல் அவற்றின் மீது வாகனத்தை மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்