சாலையில் உலாவரும் மாடுகள்

Update: 2025-10-12 07:58 GMT

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி அமைந்துள்ள வார்டு 105,106 -வது பகுதியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் அதிகளவிலான மாடுகள் உலாவருகிறது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அவ்வப்போது விபத்துகளும் நிகழ்கிறது. குறிப்பாக மாடுகளின் உரிமையாளர்கள் சாலையிலேயே பால் கறந்துவிட்டு, சாலைகளிலேயே கட்டிவிட்டி செல்வதால் அவைகளின் கழிவுகள் அங்கேயே தேக்கமடைகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று அபாயம் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் ஏற்படும் தொல்லையை சரிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்