குண்டும், குழியுமான சாலை

Update: 2025-10-05 12:54 GMT

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழூர் நான்கு ரோட்டில் இருந்து நாணப்பரப்பு வரை சுமார் 1 கிலோமீட்டர் நீளம் உள்ள தார் சாலை போடப்பட்டு பல வருடங்கள் ஆனதால் சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்