விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் மழை பெய்யும் காலங்களில் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?