சென்னை மாநகராட்சி 8-வது மண்டலம், டி.பி.சத்திரம் பகுதியின் வி.எஸ்.புரம் பகுதியின் 18,19-வது குறுக்குதெருவின் பெயர் பலகைகள் உள்ளன. ஆனால் அவைகளில் பெயர்கள் இல்லை. இதனால் அங்குள்ள வீடுகளுக்கு பார்சல் கொடுக்க வருபவர்கள் முகவரி தேடி அலையும் அவலம் இருக்கிறது. மேலும் இந்த பகுதியின் முக்கால்வாசி தெருக்களில் இதே நிலைதான். எனவே இதை மாற்ற சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் பெயர்பலகைகளை தகுந்த முறையில் சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.