புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் பஸ் நிறுத்தம் எதிர்புறம் உள்ள பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் பாலத்தில் ஓட்டை விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சுற்றி செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு நேர விரையம் ஏற்படுவதால் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கழிவுநீர் கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.