கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வாங்கபாளையதில் இருந்து அரகாலனி வரை தார்சாலை போடப்பட்டு, அரசு பள்ளி அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால், இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசினர். எனவே இதற்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.