உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகிலும், எல்.எப். ரோட்டிலும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படவில்லை. இதனால் சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.