ராமநாதபுரம் மாவட்டம் பருக்கைக்குடியில் இருந்த பருத்திகுளம் வரை செல்லும் தார்ச்சாலை முற்றிலுமாக சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் அச்சாலையில் பயணிக்கம் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சீரமைத்துதர நடவடிக்கை எடுப்பார்களா?