விபத்து ஏற்படுத்தும் சாலை

Update: 2025-08-17 11:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே மாந்தாங்குடியிலிருந்து அரியூர் வழியாக பொக்கிஷக்காரன்பட்டி வைத்தூர் புத்தாம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள இந்த சாலையில் 2 இடங்களில் எஸ் வடிவிலான வளைவு கொண்ட சாலையாக உள்ளது. இந்த சாலையின் அருகே சாலை எஸ் வடிவிலானது என்ற குறியீடோ, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதத்தில் விபத்துப்பகுதி என்ற எச்சரிக்கை பலகையோ, வேகத்தடையோ இல்லாததால் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்