தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சாந்தாங்காடு பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருட்டில் மேடு, பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை