அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியிலிருந்து தெற்குபுறத்தில் ஸ்ரீபுரந்தான், விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் முதன்மை சாலை உள்ளது. இதன் வழியாக தினமும் எண்ணற்ற கனரக வாகனங்கள், பஸ்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் சந்திரபாளையம் தரைப்பாலத்திற்கு வலது புறத்தில் சேலத்தார்காடு, முனியங்குறிச்சி புத்தூர் கிராமங்களுக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலையில் எவ்வித வேகதடையும் இல்லாததால் அதிகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.