திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் அதிகம் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக டோல்கேட்டில் இருந்து எம்.ஐ.ஈ.டி. கல்லூரி வரை அதிக அளவில் கால்நடைகள், குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கால்நடைகளால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.