ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எம்.எஸ்.அக்ரஹாரம் பகுதியில் உள்ள சாலை முற்றிலுமாக சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமமடைகின்றனர். மேலும் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அவ்வப்போது விபத்தையும் சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
,