சென்னை அடையாறு, காமராஜ் அவென்யூ 1-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதம் அடைந்து உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் செல்லும் சாலையில் பள்ளம் கிடப்பதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும், கழிவுநீரில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, உடனடியாக கழிவுநீர் கால்வாய் மூடியை மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.