வீரவநல்லூர்- புதூர் இடையே புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் புதிய சாலை அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை ேமற்கொள்ள வேண்டுகிறேன்.