கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையில் எரிவாயு மயானம் அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.