சென்னை புரசைவாக்கம், பிஷப் லேன் தெருவின் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் குளம் போன்று தண்ணீர் தேங்கி விடுகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வாகனஓட்டிகள் என இந்த வழியாக செல்லும் பலதரப்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.