ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து இளங்கோவடிகள் தெரு செல்லும் சாலையின் இருபுறமும் அதிகளவு வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.