ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினம் கிராமத்தில் இருந்து அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். சாலையில் பயணிப்பதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?