கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறையில் இருந்து பொன்னன்படுகை வரை செல்லும் சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமிக்கத்தொடங்கியுள்ளன. இதனால் சாலையும் சுருங்குவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை ஆக்கிரமித்த செடி-கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.