சென்னை தியாகராய நகர், சோமசுந்தர பாரதிநகர் 2-வது தெருவில் உள்ள சாலையில் கடந்த சில மாதமாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயமும் உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.