ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து கரடு, முரடாக உள்ளது. இந்த சாலைகள் போக்குவரத்துக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?