உளுந்தூர்பேட்டை அருகே பின்னல்வாடி கிராமத்திற்கு செல்லக்கூடிய வீரமங்கலம் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.