கடையம் அருகே கீழாம்பூர் ரெயில்வே கேட்டுக்கு மேற்கே குளக்கரை மடை பகுதியில் சாலையோரம் பள்ளமாக உள்ளது. அங்கு புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே அங்கு புதர்செடிகளை அகற்றி தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.