திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் எஸ்.ஐ.டி. பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வந்து, திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் வேகமாக ஏறும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.