சேரன்மாதேவி அருகே கங்கனாங்குளம்-கரிசல்பட்டி சாலை குறுகலாக உள்ளது. கரிசல்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாகவே சென்று வருகின்றனர். இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே குறுகலான சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.