அம்பை வண்டிமறித்தம்மன் கோவில் பகுதியில் இருந்து சின்ன சங்கரன்கோவில் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டினர். குழாயை பதித்த பின்னர் சாலையை சீரமைக்காததால் உருக்குலைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.