உத்தமபாளையம் பைபாஸ் சாலை, கிராம சாவடி, தேரடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களும் சாலையோரத்திலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.