சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்

Update: 2024-08-18 18:00 GMT

கம்பம் அரசு போக்குவரத்துகழக 1-வது பணிமனை வளாக சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக பணிமனைக்குள் பஸ்களை ஓட்டிச்செல்லும் டிரைவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமின்றி மழைகாலத்தில் பணிமனை வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. இரவில் பணிமனை ஓய்வறைக்கு வரும் டிரைவர்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பணிமனை வளாகத்திற்குள் சிமெண்டு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்