குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-28 18:18 GMT

கெங்கவல்லியில் இருந்து கூடமலை-நரிப்பாடி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் சிறிய அளவில் மழை பெய்தாலும் தண்ணீர் குளம்போல காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மேடு பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்