வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-07-28 10:46 GMT

திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டியில் பொன்னேரிபுரம்- கீழக்கண்டார்கோட்டை சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த சலையில் வாகனங்கள் வேகமாக செல்வதினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் முக்கியமான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்