வேகத்தடைகளால் கால விரயம்

Update: 2024-07-21 18:15 GMT

ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் அதிகளவில் வேகத்தடைகள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த வழித்தடத்தில் அவசர நிலையில் செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற வாகனங்களுக்கு கால விரயம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் அத்தியாவசிய இடங்களில் மட்டும் வேகத்தடைகளை வைத்துவிட்டு பிற இடங்களில் நீக்கினால் அவசர ஊர்திகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏதுவாக இருக்கும்.

மேலும் செய்திகள்