தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்

Update: 2024-07-21 16:20 GMT

தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்

திருப்பூரில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. திருப்பூர் காஞ்சி காமாட்சி நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் ஒன்றோடு ஒன்று சட்டை போட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோரையும் துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் குழந்தைகள் வெளியில் விளையாட முடிவதில்லை. பல இடங்களில் நாய்கள் பலரை கடித்து வரும் நிலையில் திருப்பூரிலும் அவ்வப்போது சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தெருநாய்கள் இரவில் குரைத்துக் கொண்டு இருப்பதால் இரவில் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சமடைகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

-முரளி, திருப்பூர்.

மேலும் செய்திகள்