சாலையை சீரமைக்க கோரிக்கை

Update: 2024-07-14 17:18 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரம் ஊராட்சி காந்திபுரம் பகுதி பச்சை மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. உப்பிலியபுரம் சோபனபுரம் சாலையின் இடையே செல்லும் பிரிவு சாலை வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள காந்திபுரத்திற்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சாலை செப்பனிடப்படாமல் இருப்பதால் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்