சாலை சீரமைப்பு பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2024-07-14 12:58 GMT
சேத்தியாத்தோப்பு அருகே வடக்கு சென்னிநத்தம் முதல் அங்குள்ள மேல்நிலைப்பள்ளி வரை உள்ள சாலையானது பலத்த சேதமடைந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் விடுத்த கோாிக்கையை ஏற்று அந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்