சாலையோர குழியால் விபத்து அபாயம்

Update: 2024-07-14 10:10 GMT

பெருமாநல்லூர் மலைப்பாளையம் ரோடு கே.கே.நகர் அருகில் ராஜஸ்ரீ நகர் எதிர்புறம் வளைவில் குழாய் அமைக்க குழி எடுத்து வேலை செய்துவிட்டு அதை அப்படியே மூடாமல் மண் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த மண்ணால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் வரும்போது விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே இதை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


மேலும் செய்திகள்