அகற்றப்பட்ட வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-06-30 17:39 GMT

நாமக்கல் பிரதான சாலையில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் மறுபுறத்தில் பலபட்டரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் எளிதில் சாலையை கடக்கும் வகையிலும், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சாலையை கடக்கும் வகையில் கோவில் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வேகத்தடை தேரோட்ட நிகழ்ச்சியின் போது அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மீண்டும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்