வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2024-06-30 17:36 GMT

ராசிபுரம் கூனவேலம்பட்டி புதூர் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஊரின் நடுவே தார்ச்சாலை அமைக்கப்பட்டு சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்பட்டது. ஆனால் சாலையின் அமைப்பு சரியில்லாமல் சாலையோரத்தின் வளைவில் இரு புறமும் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் இந்த பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த சாலையின் அருகே உள்ள பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபபிரியா, ராசிபுரம்.

மேலும் செய்திகள்