சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2024-06-16 14:47 GMT

சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி மீனாம்பாறையிலிருந்து வீரபாண்டி செல்லும் ரோட்டில், ரேசன் கடை அருகே ரோட்டில் குழி ஏற்பட்டு, தற்போது பெரிய குழியாக மாறி உள்ளது.அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான தனியார் பனியன் நிறுவனங்கள், சாய ஆலைகள், பள்ளிகள் உள்ளிட்டவை உள்ளன.அதிக வாகன போக்குவரத்து மிக்க இந்த ரோட்டில், இருசக்கர வாகன ஓட்டிகள் குழி இருப்பது தெரியாமல், வாகனத்தை குழிக்குள் இறக்கி நிலை தடுமாறி விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே ரோட்டில் ஏற்பட்டுள்ள குழியை சீரமைக்க வேண்டும்.

முருகன்,கரைப்புதூர்

87877 65744

மேலும் செய்திகள்